
ATM வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு…!! வங்கிகளில் பிடிக்கப்படும் கட்டணத்தை RBI உயர்த்தி அதிரடி உத்தரவு
வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள், அதன் ஏடிஎம் யில் பண பரிவர்த்தனைகள், பேலன்ஸ் சரிபார்த்தல் மற்றும் ஸ்டேட்மென்ட் எடுத்தல் ஆகிய சேவைகளை பயன்படுத்துவதற்கு சில கட்டுப்பாடுகள், ரிசர்வ் வங்கியால் அவ்வப்போது விதிக்கப்படுகிறது. அதில், கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம் யை, வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு ஐந்து முறை எந்தவித கட்டணமும் இன்றி, இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று சமீபத்தில் அறிவித்தது.
இதையடுத்து, மற்ற வங்கிகளின் ஏடிஎம் யை பெருநகரங்களில் மாதத்திற்கு 3 முறையும், பெருநகரம் இல்லாத இடங்களில் மாதத்திற்கு 5 முறையும் இலவசமாக பயன்படுத்தி கொள்ள வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, தற்போது கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம் யை மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால், வசூலிக்கப்படும் கட்டணத்தை ரூ. 21 லிருந்து ரூ. 23 ஆக RBI உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த நடைமுறை வருகின்ற மே மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.























