ரேஷன் கடைகளில் நேரத்தை முறையாக கடைபிடிக்காத பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மிக குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் கடைகளில் நடைபெறும் குளறுபடிகளை தவிர்க்கும் பொருட்டு அரசு ஏகப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரேஷன் கடைகள் திறக்கும் நேரம் மற்றும் மூடும் நேரம் முதலியவற்றை உறுதி செய்வது கட்டாயமாக உள்ளது. எனவே தற்போது தமிழகத்தில் ரேஷன் கடைகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 2 தேர்வு உங்கள் கனவா? உங்களுக்கு இது தான் முக்கியம்!
அதன்படி சென்னை மற்றும் புறநகரில் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்படும் என்றும் மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும்; பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட நேரங்களில் சில கடைகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூட்டுறவு மற்றும் உணவு துறை உயர் அதிகாரிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். ரேஷன் கடைகளில் நேரத்தை முறையாக கடைபிடிக்காத பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.