ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு ரூ.2500 விநியோகம் – தமிழக அரசு புதிய திட்டம்!!

0
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு ரூ.2500 விநியோகம் - தமிழக அரசு புதிய திட்டம்!!
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு ரூ.2500 விநியோகம் - தமிழக அரசு புதிய திட்டம்!!
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு ரூ.2500 விநியோகம் – தமிழக அரசு புதிய திட்டம்!!

தமிழக அரசு சார்பில் வருடந்தோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்பில் இந்த ஆண்டு புதிய கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வழக்கமாக வழங்கப்படும் ரூ.1000க்கு பதிலாக, ரூ.2500 வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் விநியோக பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்த தமிழக சிவில் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொங்கல் பரிசு:

கொரோனா ஊரடங்கு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பலரும் வேலையிழந்து உரிய வருமானம் இன்றி தவித்தனர். இதனால் அரசு சார்பில் ரூ.1000 நிதியுதவி ரேஷன் கடைகள் மூலமாக ஊரடங்கு காலத்தின் மத்தியில் வழங்கப்பட்டது. தற்போது பொங்கல் பரிசையும் உயர்த்தி வழங்க திட்டமிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ரூ.2500 ரொக்கம், முழு கரும்பு, சர்க்கரை, பச்சரிசி, ஏலக்காய், முந்திரி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.

முதுகலை ஆசிரியர் பணியிட கலந்தாய்வு நாளை தொடக்கம் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

பொங்கல் பரிசு விநியோகம் ஜனவரி 4ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் டிசம்பர் 26ம் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அதில் நாள், தேதி உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றிருக்கும். அதில் குறிப்பிடப்பட்டு உள்ள நேரத்தில் வந்து மக்கள் பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம். தினம் 200 குடும்ப அட்டைகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

பொங்கல் பரிசுத்தொகை ரூ.2500 – எந்த ரேஷன் கடையிலும் பெற முடியுமா??

ஏற்கனவே பொங்கல் பரிசு டோக்கன் வழங்குவதில் கூட்ட நெரிசல் உள்ளிட்ட சிக்கல்கள் நிலவுவதால், ரேஷன் ஊழியர்களுக்கு பெரும் சிரமம் நிலவி வருகிறது. மேலும் லட்சக்கணக்கில் பணம் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் விநியோகிக்கப்பட உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு அவசியமான ஒன்று. எனவே ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் 2 போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலை பொறுத்து பதற்றமான இடங்களில் கூடுதல் போலீசாரை களமிறக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!