3 மாதம் ரேஷன் பொருள் வாங்கவில்லையா? உங்க கார்டு ரத்தாகும் – அரசு எச்சரிக்கை!
சிம்லா அரசு 3 மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருள்கள் வாங்காதவர்களின் கார்டுகள் ரத்து செய்யப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ரேஷன் கடை சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது. இந்நிலையில் ரேஷன் கடை சேவைகளை தொடர்ந்து பெற நுகர்வோர் தொடர்ந்து ரேஷன் பொருள்களை வாங்க வேண்டும். அவ்வாறு வாங்காமல் இருந்தால் மூன்று மாதங்களுக்கு பின் அது தானாகவே ரத்து செய்யப்படும். இந்நிலையில் அவ்வாறு ரத்து செய்யப்பட்டால் மீண்டும் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்க வேண்டும் என சிம்லா அரசு தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் பயணிகளுக்கு புதிய வசதி – இனி பயணம் ரொம்ப ஈஸி!
சிம்லா அரசு சார்பில் 1,17,216 லட்சம் டிஜிட்டல் ரேஷன் கார்டுதாரர்கள் இருக்கின்றனர். அவைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருப்பதாலும், ஆன்லைன் டேட்டா இருப்பதாலும், ரேஷனில் யாரு பொருட்கள் வாங்கவில்லை என தெரியவந்துள்ளது. அதனால் அவர்களின் ரேஷன் கார்டுகளை முடக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் உங்களுக்கு ரேஷன் பொருள்கள் வாங்க விருப்பம் இல்லை என்றால், பிரச்சனை இல்லை. ஆனால் அப்படி இல்லை என்றால் நீங்கள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.