அடுத்த 3 மணி நேரங்களுக்கு மிகவும் ஜாக்கிரதை மக்களே – இடி, மின்னலுடன் மழை!
தமிழகம் முழுவதும் பரவலாக அடுத்து வரும் 3 மணி நேரங்கள் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை அலர்ட்:
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் நிலவி வருகிறது. இதனால், அடுத்து வரும் ஓரிரு நாட்களுக்கு தமிழக மாவட்டங்களில் மழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முற்பகல் அறிக்கையில் தெரிவித்தது. இந்நிலையில், தற்போது வெளியான அறிக்கையில், எச்சரிக்கை தகவல் ஒன்றை அளித்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் 10,000 ஆசிரியர் காலியிடங்கள் – அரசின் திட்டம் என்ன?
அதாவது, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி,சேலம், பெரம்பலூர், நாகை, திருவாரூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Exams Daily Mobile App Download