தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு செப்.5 முதல் காலாண்டுத் தேர்வு துவக்கம் – அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத்தேர்வு வரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் துவங்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அட்டவணை வெளியிட்டுள்ளது.
காலாண்டு தேர்வு:
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 2023 – 2024 ம் கல்வியாண்டிற்கான அனைத்து தேர்வு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு வரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், அரையாண்டு தேர்வு டிசம்பர் 11 முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 3 – வது வாரத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (ஜூலை. 09) மின்தடை? முழு விவரம் உள்ளே!
இது மட்டுமல்லாமல் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத்தேர்வு, பருவத் தேர்வு, திருப்புதல் தேர்வு மற்றும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பருவத்தேர்வு என அனைத்து கால அட்டவணைகளும் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில், காலாண்டு தேர்வுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் விரைவில் பாடத்திட்டங்களை முடிக்கும்படி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாணவர்கள் கால அட்டவணையை பின்பற்றி தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ளும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.