தமிழகத்தில் நாளை (ஜூலை. 09) மின்தடை? முழு விவரம் உள்ளே!
தமிழகத்தில் நாளை (ஜூலை. 09) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. அதனால் மின் விநியோகம் தடை செய்யப்படாது என்று தகவல்கள் வந்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பான முறையில் மின்சாரத்தை விநியோகிக்கும் நோக்கில் மின்வாரியம் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளின் போது அத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க கடன் வசதி – அரசின் சூப்பர் திட்டம்! முழு விவரம்!
இது குறித்து அந்தந்த பகுதி மின்வாரிய செயற் பொறியாளர்கள் பயனர்களுக்கு முன்னறிவிப்பு செய்கின்றனர். இந்த நிலையில் நாளை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. ஏனெனில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பொதுமக்களின் மின் தேவையை உணர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாது அதனால் மின்
தடை செய்யப்படமாட்டாது. மேலும் திங்கட்கிழமை (ஜூலை. 10) ஹைவேவிஸ், கரூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.