தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க கடன் வசதி – அரசின் சூப்பர் திட்டம்! முழு விவரம்!
தமிழகத்தில் பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகளை சேர்ந்தவர்கள் புதிதாக தொழில் தொடங்க தமிழக அரசு கடன் மானிய திட்டத்தை அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள் வாழ்க்கையில் முன்னேற பல நலத்திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆதிதிராவிட, பழங்குடியின தொழில்முறைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு சமீபத்தில் ஒரு கடன் மானிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் குறித்து நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி பட்டியல் சமூகத்தை சேர்ந்த 55 வயதுக்கு உட்பட்டவர்கள் புதிதாக தொழில் தொடங்க 1.5 கோடி ரூபாய் வரை கடன் பெறலாம்.
தமிழகத்தில் கனமழை மழை கொட்டப்போகுது மக்களே – உஷாரா இருங்க!
இந்த திட்டத்திற்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டதை தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் நேரடி வேளாண்மைக்காக விண்ணப்பிக்க முடியாது. அதனை தவிர உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த வித புதிய தொழில் துவங்க கடன் பெறலாம். புதிய தொழில் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் 35% முதலீட்டு மானியம் (capital subsidy) வழங்கப்படும். அதிகபட்சத் தொகையாக 1.5 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
Join Our WhatsApp Group” for Latest Updates
அதே போல 65% வங்கி கடன் ஏற்பாடு செய்யப்படும். மீதமுள்ள 35% அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும். மேலும் வங்கியில் வாங்கும் கடனுக்கு வட்டி விகிதத்தில் 6% வட்டியை அரசே வங்கியில் செலுத்திவிடும். இந்த திட்டத்திற்காக அரசு ரூ. 100 கோடி நிதியை ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. மேலும் தனி நபர்கள் மட்டுமல்லாது, முழு உரிமை கொண்ட தனியுரிமையாளர், பங்குதாரர் கூட்டாண்மை, பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும் விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 55க்கு மிகாமல் இருக்க வேண்டும்.