தமிழகத்தில் செல்ல பிராணிகளுக்கான உரிமம் கட்டாயம் – மாநகராட்சி அறிவிப்பு!
தமிழகத்தில் செல்ல பிராணி வைத்திருப்பவர்கள் கட்டாயமாக செல்ல பிராணி வளர்ப்பதற்கான உரிமத்தினை பெற்றிருக்க வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
செல்ல பிராணிகளுக்கான உரிமம்:
தமிழகத்தில் உள்ள அனைத்து நாய்கள் மற்றும் பூனைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை மண்டல வாரியாக கணக்கீடு செய்வதற்கான நடவடிக்கை மாநகராட்சி பொது சுகாதார மையத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் செல்ல பிராணி வைத்திருப்பவர்கள் கட்டாயமாக செல்ல பிராணி வளர்ப்பதற்கான உரிமத்தை ஆன்லைன் வழியாக பெற்றிருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு செப்.5 முதல் காலாண்டுத் தேர்வு துவக்கம் – அட்டவணை வெளியீடு!
அதாவது செல்லப்பிராணிகளை மண்டல கால்நடை மருத்துவரின் உதவியுடன் சரிபார்க்கப்பட்டு அதற்கான கட்டணமாக ரூ.50 செலுத்தி செல்லப்பிராணி வளர்ப்பதற்கான உரிமத்தை கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்ல பிராணிகளுக்கான உரிமம் வழங்குவது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் எனவும் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.