9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் – துணை ஆளுநர் அறிவிப்பு!!
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல் தேர்வுகள் நடைபெறும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
துணைநிலை ஆளுநர் அறிவிப்பு:
புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு வகுப்புகள் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த திட்டம் மீண்டும் திறக்கப்பட்டு 2500 மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் பள்ளி குழந்தைகளுக்கு நாளை காலை முதல் பள்ளிகளில் பால் வழங்கப்படும். பள்ளிக்குழந்தைகளின் படிப்புக்கு தேவையான அனைத்தும் வழங்கப்படும். மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தற்போது நடத்துவதாக இல்லை தேர்தலுக்கு பின் தேர்வுகள் நடத்தலாமா என ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் – மார்ச் 15 தேதி முதல் தொடக்கம்!!
சட்டமன்ற தேர்தல் காரணமாக தேர்வுகள் தேதி அறிவிப்பது குறித்து தாமத நிலை உள்ளது. மேலும் அந்த மாணவர்களுக்கு கட்டாயம் வழக்கம் போல் எழுத்து தேர்வு முறையில் தேர்வு நடத்தப்படும். தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்ய பட்ட நிலையில் புதுச்சேரி மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வுகள் நடத்தப்படும். அவர்கள் அக்டோபர் மாதம் முதல் பள்ளிக்கு வருவதால் அவர்களுக்கு தேர்வுகள் நடத்துவதில் சிரமம் எதுவும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்