ஏப்ரல் 3 முதல் வழிபாட்டு தலங்கள் மூடல் – மாநில அரசு அறிவிப்பு!!
புனேவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக இன்று (ஏப்ரல் 3) முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை அனைத்து மத வழிபாட்டு தலங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
வழிபாட்டு தலங்கள் மூடல்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை 89,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாட்டில் அதிகம் கொரோனா பரவும் மாநிலமாக உள்ளது. எனவே அந்த மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது புனேவில் கொரோனா தாக்கம் சற்றும் குறையாத காரணத்தினால், இன்று முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை வழிபாட்டு தலங்கள் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் ஏப்ரல் 5ம் தேதி திறப்பு – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!
மேலும் உணவகங்களில் இன்று முதல் பார்சல் முறையில் மட்டுமே உணவு வழங்கப்படும். அடுத்த 7 நாட்களுக்கு உணவகங்களில் உணவு சாப்பிட அனுமதி இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் புனேவில் கொரோனாவால் 70,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 8,373 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர் மற்றும் 4,74,141 பேர் குணமடைந்துள்ளனர்.
TAMILNADU?