பிப்ரவரி 28 வரை பள்ளிகளை மூட உத்தரவு – கொரோனா பரவல் எதிரொலி!!

0
பிப்ரவரி 28 வரை பள்ளிகளை மூட உத்தரவு - கொரோனா பரவல் எதிரொலி!!
பிப்ரவரி 28 வரை பள்ளிகளை மூட உத்தரவு - கொரோனா பரவல் எதிரொலி!!
பிப்ரவரி 28 வரை பள்ளிகளை மூட உத்தரவு – கொரோனா பரவல் எதிரொலி!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் அடுத்த வாரம் வரை நகரில் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூடப்பட்டன:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று எடுக்கப்பட்ட கணக்கீடு படி இதுவரை 20,93,913 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 19,92,530 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 48,439 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மகாராஷ்டிராவில் 51,763 பேர் உயிர் இழந்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

குறிப்பாக புனே நகரில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. நகரில் நேற்று வரை கணக்கெடுப்பின் படி 3,99,254 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3,81,961 பேர் குணம் அடைந்துள்ளனர். 8,028 பேர் உயிர் இழந்துள்ளனர். 9,217 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நகரில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. புனேவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அடுத்த வாரம் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பிஇஓ பதவி உயர்வு – ஆசிரியர்கள் கோரிக்கை!!

கொரோனா தாக்கம் மேலும் 3 மாதங்கள் அதிகமாக நீடிக்கலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே ஊரடங்கு விதிகளை கடுமையாக்கி, மக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாடு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என புனே மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!