2022ல் சந்திராயன் 3 திட்டம் – இஸ்ரோ தலைவர் தகவல்!!!
நிலவை ஆய்வு செய்வதற்கான சந்திராயன் 3 திட்டம் மற்றும் ககன்யான் திட்டம் போன்ற பணிகள் அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் சிவன் அவர்கள் தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சி:
ஒரு நாட்டின் வளர்ச்சியை அந்த நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் முயற்சிகளை வைத்து தான் அது வளர்ந்த நாடாக உள்ளதா அல்லது வளர்ந்து கொண்டிருக்கும் நாடாக உள்ளதா என்பதை நிர்ணயிக்க முடியும். அந்த வகையில் இந்தியா வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் உள்ளது. கடந்த சில வருடங்களாக இந்திய நாட்டிலேயே விண்வெளி ஆராய்ச்சிக்கான அனைத்து பணிகளும் நடக்கிறது மற்றும் செயற்கைகோள்களும் முழுவதுமாக நமது நாட்டின் முயற்சியிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஐஏஎஸ்., ஐபிஎஸ் இலவச பயிற்சி – நுழைவுத்தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
இஸ்ரோவின் திட்டம்:
அந்த வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பல புதிய முயற்சிகளை செய்து வருகிறது. இன்னும் புதிய திட்டங்களையும் செய்லபடுத்தும் முயற்சியில் உள்ளது. அந்த வகையில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான் திட்டம்’ தொடர்பான ஆயத்த பணிகளும் நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றினால் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பிவரும் காரணத்தால் விண்வெளி திட்டங்களை துரிதப்படுத்தும் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இஸ்ரோ தலைவர் :
இந்நிலையில் இஸ்ரோவின் தலைவர் சிவன் அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம், சந்திராயன் 3 திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகின்றது. சந்திராயன் 3 திட்டத்திற்கு தனியாக விண்கலம் ஏதும் இல்லை. சந்திராயன் 2 திட்டத்தின் போது செலுத்தப்பட்ட விண்கலம் இதற்கும் பயன்படுத்ததப்படும் என்று கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்