ஐஏஎஸ்., ஐபிஎஸ் இலவச பயிற்சி – நுழைவுத்தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
இலவச பயிற்சி வகுப்பு:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 2021 ஜூன் 27ம் தேதி ஐஏஎஸ்., ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வுக்காக தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் கட்டணமில்லா பயிற்சி வகுப்பை நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் கட்டணமில்லா பயிற்சி, கட்டணமில்லா தங்கும் வசதி, உணவு மற்றும் நூலகம், வகுப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்படும். இலவச பயிற்சியை பெறுவதற்கு மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடம் – பள்ளிக்கல்வித்துறை திட்டம்!!
நுழைவுத் தேர்வு:
பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு தமிழகம் முழுவதும் உள்ள 13 இடங்களில் கடந்த ஜனவரி 24ம் தேதி நடைபெற்றது. சென்னையில் மொத்தம் 5 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. மொத்தம் 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் மட்டுமே பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள முடியும். மொத்தம் 225 முழு நேர தேர்வர்களும், 100 பகுதி நேர தேர்வர்களும் இலவச பயிற்சிக்காக தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வின் முடிவுகள் பிப்ரவரி 18ம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
அதிர்ச்சி:
தேர்வின் முடிவுகளை கண்டு மாணவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனென்றால் சென்னையில் தேர்வு எழுதியவர்கள் அனைவருமே வெளியூர்களை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருமே தங்கும் வசதியற்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 225 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இது குறித்து நிர்வாகத்திடம் கேட்டால் முறையாக எந்த பதிலையும் சொல்வவில்லை. இதனால், தேர்வு எழுதிய மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வருகின்றனர். எனவே, தேர்வு முடிவுகளை உடனடியாக தகுதி அடிப்படையில் வெளியிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறினர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்