இறுதியாண்டு வகுப்புக்கள் ஆரம்பம் – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டதை அடுத்து புதுசேரியில் எப்போது கல்லூரிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் புதுசேரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்போவதாக புதுசேரி அரசு அறிவித்தது.
கல்லூரிகள் திறப்பு
தமிழகத்தில் கடந்த 7-ந் தேதி முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அதேபோல் புதுசேரியில் எப்போது கல்லூரிகள் திறக்கப்படும் என்று கேள்வி எழுந்தது. மத்திய அரசு கூறிய அறிவுரைகளின்படி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை திறக்க உயர் கல்வி துறை பரிந்துரை செய்தது.
பெண்களுக்கு வங்கிக்கணக்கில் ஊக்கத்தொகை – அரசு அறிவிப்பு!!
அதன்படி புதுவையில் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை இறுதியாண்டு, முதுகலை இறுதியாண்டு வகுப்புகளும், ஆராய்ச்சி படிப்புகளும் வியாழக்கிழமை டிச 17ம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 50 சதவீத மாணவர்களை மட்டுமே ஒரு வகுப்பறையில் இருக்க வேண்டும். மாணவர்களை 2 பிரிவுகளாக பிரிந்து ஒரு நாள் விட்டு, ஒருநாள் கல்லூரிக்கு வர வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் உயர்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
உயர்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, அனைத்து கல்லூரி முதல்வர்களுடன் காணொலிக்காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். தற்போது வகுப்புகள் தொடங்கினால் செமஸ்டர் தேர்வுகளை எவ்வாறு நடத்துவது மாணவர்கள் எவ்வாறு அதை கையாளுவார்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு இயக்குனர் ருத்ரகவுடு இ-மெயில் மூலம் முதல்வர்களின் சந்தேகங்களை அனுப்பி வைக்குமாறும் அதை பற்றி ஆலோசனை செய்து பதில் தெரிவிப்பதாகவும் கூறினார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்