பெண்களுக்கு வங்கிக்கணக்கில் ஊக்கத்தொகை – அரசு அறிவிப்பு!!
முதல்வரின் பட்டதாரி பெண் குழந்தைகளுக்கு ஊக்க தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் ரூபாய் 50 ஆயிரம் அவரகளது வங்கிக்கணக்கில் மாற்றப்படும் என பீகார் அரசு அறிவித்துள்ளது.
பெண்களுக்கான சட்டம்:
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கல்வி மிகவும் முக்கியம். மேலை நாடுகள் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருப்பதற்கு பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது தான் காரணம்.நாடு மட்டுமல்ல, வீடும் நன்றாக இருக்க வேண்டுமானால், பெண்கள் கல்வியறிவு பெற வேண்டும். குடும்பத்தை திறம்பட செயலாற்ற பெண்கள், கல்வி கற்பது மிக அவசியம்.
5 கோடி வேலை வாய்ப்பு- நிதின்கட்கரி அறிவிப்பு!
இதனை மையமாக வைத்து பீகார் அரசு பெண்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பட்டதாரி பெண்குழந்தைகளுக்கு ரூபாய் 50 ஆயிரம் ஊக்கத்தொகை அளிப்பதாக அறிவித்தது. பீகாரில் பட்டம் பெரும் பெண்களுக்கு ஊக்க தொகையை பீகார் அரசு அவர்களது நேரடி வங்கி கணக்கிற்கு செலுத்துவதாக தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 1.4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 84,344 பேருக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்களில் எதோ தவறு இருப்பதாக அந்த அந்த பல்கலைக்கழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன. அவர்கள் திருத்தங்கள் செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் என பீகார் அரசு தெரிவித்துள்ளது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்