புதுச்சேரி அரசுக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி – ஆளுநர் ஒப்புதல்!
புதுச்சேரி அரசு கல்லூரிகளில் பயிலும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்க புதிய திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.
இலவச மடிக்கணினி
புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அரசு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் இளநிலை மற்றும் முதுகலை கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதற்கான புதிய திட்டத்துக்கான அரசாணை வெளியிடும் கோப்புக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.
இந்த ஊழியர்களுக்கு ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!
இது குறித்து நடைபெற்ற விசாரணையில், கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். தற்போது ஜெம் போர்டல் மூலம் லேப்டாப் வாங்க ஏல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 25,381 லேப் டாப் வாங்க அதற்கான நிறுவனங்களிடம் இருந்து போர்ட்டல் மூலம் ஏலப் பணி தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
Exams Daily Mobile App Download