உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் சஞ்சீவ் கண்ணா..!! குடியரசு தலைவர் உத்தரவு..!!
இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் தலைமையகமாகவும், இந்தியா அரசியல் சாசனத்தின் அச்சாணியாக உச்ச நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை நீதிபதியாக தற்போது சந்திரசூட் செயல்பட்டு வருகிறார். இவர் வரும் நவம்பர் 11 தேதியோடு ஓய்வு பெற உள்ள நிலையில், இவர் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை பரிந்துரைத்தார். தற்போது இவரின் பரிந்துரையை குடியரசு தலைவர் ஏற்று சஞ்சீவ் கண்ணாவை அடுத்த ( 51 வது )உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார். இவரின் பதவியேற்பு விழா கூடிய விரைவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் கவனத்திற்கு.. நவம்பர். 16ல் ரேசன் கடைகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு!!



























