தமிழகத்தில் நாளை ( அக்.11) இந்த பகுதிகளில் மின்தடை – பொதுமக்களே உஷார்!

0
தமிழகத்தில் நாளை ( அக்.11) இந்த பகுதிகளில் மின்தடை - பொதுமக்களே உஷார்!
தமிழகத்தில் நாளை ( அக்.11) இந்த பகுதிகளில் மின்தடை - பொதுமக்களே உஷார்!
தமிழகத்தில் நாளை ( அக்.11) இந்த பகுதிகளில் மின்தடை – பொதுமக்களே உஷார்!

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (அக். 11) மின்தடை ஏற்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை பகுதிகள்:

தமிழகத்தில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால், பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தும், மின் வயர்கள் அறுந்தும் இருக்கிறது. மின்சார பராமரிப்பு பணிகள் மூலமாக அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் நாளை (அக். 11) கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நல்லாம்பாளையம் ஹவுசிங் யூனிட், தாமரை நகர், சாமுண்டீஸ்வரி நகர், யூனியன் சாலை, முருகன் நகர், தயாள் வீதி, ஜெம் நகர், அமிர்தா நகர், சபரி கார்டன், மணியகாரம்பளையம், இந்திரா நகர், ஜீவா நகர், கே.கே. புதூர் 6வது வீதி, கிருஷ்ணா நகர், கே. ஜி.லே. அவுட், தேவி நகர், கிருஷ்ணம்மாள் வீதி, சின்னம்மாள் வீதி, ஏ.ஆர். நகர். ஓட்டுநர் காலனி, சுகுணா நகர், அசோக்நகர், சபரி கார்டன், பாரதி நகர், டிவிஎஸ் சாலை, ஓம் நகர், கணேஷ் லே அவுட், ரங்கா லே அவுட், சாய்பாபா காலனி, காவேரி நகர், காமராஜ் வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கணபதி லே அவுட், கிரி நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.

தமிழகத்தில் நாளை இந்த 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Exams Daily Mobile App Download

மேலும் அமாசை கோனார் வீதி, என்.ஜி.ஆர். வீதி. இடையர்பாளையம் பி & டி காலனி, பூம்புகார் நகர், அருண் நகர், ராமலட்சுமி நகர், சிவா நகர், சேரன் நகர், தென்றல் நகர், பாலன் நகர், ஈ.பி காலனி, டி.வி. எஸ் , நகர், அன்னை அமிர்தானந்தா நகர், வள்ளி நகர்ம் தட்சண தோட்டம், ஐ.டி.ஐ நகர், சரவணா நகர், லட்சுமி நகர். ரங்கா மெஜஸ்ட்டிக் , ரயில்வே மென்ஸ் காலனி, தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் லெனின் நகர், கவுண்டம்பாளையம் பம்ப் ஹவுஸ், சுப்பாத்தாள் லே அவுட்ம் மருதக்குட்டி லே அவுட் , சாஸ்திரி வீதி, பெரியார் வீதி, சி,ஜி. லே அவுட், வஉசி வீதி, தெய்வ நாயகி நகர், நெடுஞ்செழியன் வீதி, புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், கருப்பராயன் கோவில் முதல் தயிர் இட்டேரி சாலை ஆகிய இடங்களில் நாளை (11.10.2022) மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!