தமிழகத்தில் நாளை (22-09-2022) மின்தடை அறிவிப்பு – முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே!
தமிழகத்தின் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட சமயநல்லூர் கோட்டத்தில் செப்டம்பர் 22ம் தேதியான நாளை மின்தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் மாதந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை தகுந்த முன்னறிவிப்புடன் செய்யப்படுகிறது. இதனால் மாதம் முழுவதும் மற்ற நாட்களில் எந்த வித தடையும் இன்றி முழுமையாக மின் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், பராமரிப்பு பணிகளின் போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் வகையில், அனைத்தும் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் சோதித்துக் கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.
மற்ற மாநிலங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையிலும் கூட தமிழகத்தில் எந்த வித தடையும் இல்லாமல் மின்சாரம் மக்களுக்கு வழங்கப்பட்டது. மின்தடை செய்யப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் முன்னறிவிப்பின் மூலம் தங்களது மின் சார்ந்த பணிகளை முன்னதாக திட்டமிட்டு முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது மதுரை மாவட்டத்தில் உள்ள சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட மாணிக்கம் பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள தேவசேரி பீடர், அலங்காநல்லூர் துணைமின் நிலையத்தில் உள்ள தேசிய சர்க்கரை ஆலை பீடரில் நாளை செப்டம்பர் 22ம் தேதி ( வியாழக்கிழமை) மின்தடை செய்யப்பட உள்ளது.
மீண்டும் பழையப்படி பென்சன் திட்டம்.. அரசு ஊழியர்கள் ஹாப்பி – மாநில முதல்வர் வெளியிட்ட பதிவு!
Exams Daily Mobile App Download
அதன் காரணமாக, சம்பந்தப்பட்ட துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட டி.மேட்டுப்பட்டி, பண்ணைகுடி, மலைப்பட்டி, அச்சம்பட்டி, தேசிய சர்க்கரை ஆலை, மேட்டுப்பட்டி, ஆதனூர், முடுவார்பட்டி, குறவன்குளம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின்தடை செய்யப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் வழக்கம் போல் மின் விநியோகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்