மீண்டும் பழையப்படி பென்சன் திட்டம்.. அரசு ஊழியர்கள் ஹாப்பி – மாநில முதல்வர் வெளியிட்ட பதிவு!

0
மீண்டும் பழையப்படி பென்சன் திட்டம்.. அரசு ஊழியர்கள் ஹாப்பி - மாநில முதல்வர் வெளியிட்ட பதிவு!
மீண்டும் பழையப்படி பென்சன் திட்டம்.. அரசு ஊழியர்கள் ஹாப்பி - மாநில முதல்வர் வெளியிட்ட பதிவு!
மீண்டும் பழையப்படி பென்சன் திட்டம்.. அரசு ஊழியர்கள் ஹாப்பி – மாநில முதல்வர் வெளியிட்ட பதிவு!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை விலக்கி புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பல மாநில அரசுகள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ள நிலையில் பஞ்சாப் மாநில அரசு, ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் அரசு துறைகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கு 2003 ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. அதன் பின் 2004 ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் நிலையான பல சலுகைகள் இருந்தது. ஆனால் தற்போது அமலில் இருக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் பல சலுகைகள் கிடைக்காமல் இருக்கிறது. அதனால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வர உள்ளதாக அங்குள்ள மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதனை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களும் இதற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பஞ்சாப் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்ய இருப்பதாக புதிதாக ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை (செப் 22) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இது குறித்து அம்மாநில முதல்வர் பகவந்த் மான் கூறுகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து எங்களது அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதன் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு தலைமைச் செயலாளரிடம் அறிவுறுத்தியுள்ளேன். ஊழியர்களின் நலனை காப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். அதனால் பஞ்சாப் அரசு ஊழியர்கள் நிம்மதியில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!