பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்ட தடை – மீறினால் நடவடிக்கை… மாநகராட்சி எச்சரிக்கை!!

0
பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்ட தடை - மீறினால் நடவடிக்கை... மாநகராட்சி எச்சரிக்கை!!
பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்ட தடை - மீறினால் நடவடிக்கை... மாநகராட்சி எச்சரிக்கை!!
பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்ட தடை – மீறினால் நடவடிக்கை… மாநகராட்சி எச்சரிக்கை!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதியை மீறி பெயர் பலகைகளில் சுவரொட்டிகள் ஓட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

சுவரொட்டி:

தமிழகத்தில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஓட்டுவது வழக்கமான ஒரு செயலாக இருந்து வருகிறது. சாலைகளில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தெருக்களின் பெயர் பலகைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் எழுதப்பட்டிருக்கும் பேருந்து கால அட்டவணை ஆகியவற்றின் மீது விளம்பர சுவரொட்டிகள் ஓட்டப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

இந்த சுவரொட்டிகள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், மாநகராட்சியின் அழகை சீர்குலைப்பதாகவும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பாதுகாப்பு சட்டம் 1952 – ன் படி பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஓட்ட கூடாது.

மாற்றுத்திறனாளிகளுக்காக வெளியான ஹாப்பி நியூஸ் – ஓய்வூதியம் உயர்வு! ராஜஸ்தானில் அமல்?

தற்போது பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். விதிக்கப்பட்ட தடையை மீறி சுவரொட்டி ஓட்டும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் விதியை மீறி சுவரொட்டி ஒட்டியதன் காரணமாக ரூ.1,36.000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் 340 நபர்களின் மீது புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!