மாற்றுத்திறனாளிகளுக்காக வெளியான ஹாப்பி நியூஸ் – ஓய்வூதியம் உயர்வு! ராஜஸ்தானில் அமல்?

0
மாற்றுத்திறனாளிகளுக்காக வெளியான ஹாப்பி நியூஸ் - ஓய்வூதியம் உயர்வு! ராஜஸ்தானில் அமல்?
மாற்றுத்திறனாளிகளுக்காக வெளியான ஹாப்பி நியூஸ் - ஓய்வூதியம் உயர்வு! ராஜஸ்தானில் அமல்?
மாற்றுத்திறனாளிகளுக்காக வெளியான ஹாப்பி நியூஸ் – ஓய்வூதியம் உயர்வு! ராஜஸ்தானில் அமல்?

ராஜஸ்தான் மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நீண்ட நாட்களாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் வரும் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

ஓய்வூதியத் தொகை உயர்வு:

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பதற்கு முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிவில் சமூக குழுக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

இதில், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில் Divyang உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து, வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கென்று 5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் தனியார் கல்லூரிகளில் பார்வையற்றவர்களுக்கான சிறப்பு கல்லூரியை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் வெளியிட்ட தகவல்!!

அத்துடன் மொழிபெயர்ப்பாளர்களுக்கான புதிய பணியிடங்கள் உருவாக்குதல் மற்றும் சிறப்பு திறன் கொண்ட பணியாளர்களுக்கு ஏற்ற சூழலை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். தற்போது இதனை கருத்தில் கொண்டு, 2023-24ம் ஆண்டுக்கான மாநில அரசின் பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய தொகை ரூ.1500 ஆக உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என தகவல் கிடைத்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!