அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணியிடங்கள் – பிப்ரவரி 10 இல் நேர்முகத்தேர்வு!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராமிய, அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் பிப்ரவரி 10ம் தேதி நடைபெற உள்ளதாக அம்மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
நேர்முகத்தேர்வு தேதி:
தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுத்துறைகளுக்கு பணியாட்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். போட்டித்தேர்வுகள் மூலம் தேர்வாகும் நபர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு பின்னர் கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது அஞ்சல் துறையில் காலியாக உள்ள ஆயுள் காப்பீடு முகவர் பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
பி.எஸ்இ நர்சிங் மற்றும் பி.பார்ம் படிப்புகளுக்கான கலந்தாய்வு – பிப்ரவரி 10ம் தேதி துவக்கம்!!
அதில் கிராமிய, அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்களுக்காக பிப்ரவரி 10ம் தேதி காலை 10 மணிக்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 5000க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட இடத்தில் வசிப்பவர் என்றால் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!!
5000 அல்லது அதற்கு மேல் மக்கள்தொகை உள்ள இடத்தை சேர்ந்தவர் என்றால் 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம். நேர்முகத்தேர்வில் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும். இப்பணிக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறும். ஒரு நபர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்