பி.எஸ்இ நர்சிங் மற்றும் பி.பார்ம் படிப்புகளுக்கான கலந்தாய்வு – பிப்ரவரி 10ம் தேதி துவக்கம்!!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் பி.எஸ்இ நர்சிங் மற்றும் பி.பார்ம் உள்ளிட்ட 17 வகையான படிப்புகளுக்கான கலந்தாய்வு பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துக்கல்லூரி கலந்தாய்வு:
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பி.எஸ்இ நர்சிங் மற்றும் பி.பார்ம் உள்ளிட்ட 17 வகையான படிப்புகளுக்கான 13,000க்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் இந்த படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் 38,000க்கு மேல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – வினாத்தாள் தயாரிப்பு பணிகள்!!
விண்ணப்பித்தவர்களில் மாணவர் தரவரிசை பட்டியலில் 37334 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி ஆன்லைன் மூலமாக நடைபெறுகிறது. மேலும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக பிப்ரவரி 9 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தில் நடைபெறுகிறது.
இந்தியாவில் உள்ள 300 பொதுத்துறை நிறுவனங்கள் 12 ஆக குறைப்பு – மத்திய அரசு திட்டம்!!
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக முதன்முறையாக நடைபெறுகிறது. மேலும் இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் ரூ.250 நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் முறை கலந்தாய்வுக்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இது குறித்த விவரங்கள் அறிய www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்