ஆக.31-ல் கிர்கிஸ்தானில் SCO உச்சி மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு

0

ஆகஸ்ட் 31-ல் கிர்கிஸ்தானில் எஸ்சிஓ உச்சி மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதற்காக அவர் ஆகஸ்ட் 29 முதல் உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இந்த உச்சி மாநாட்டின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் உறுப்பு நாடுகளுக்கிடையேயான முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!