இந்தியாவில் வந்தே பாரத் ரயில் திட்டம் – நாக்பூரில் பிரதமர் நாளை துவக்கி வைப்பு!

0
இந்தியாவில் வந்தே பாரத் ரயில் திட்டம் - நாக்பூரில் பிரதமர் நாளை துவக்கி வைப்பு!
இந்தியாவில் வந்தே பாரத் ரயில் திட்டம் - நாக்பூரில் பிரதமர் நாளை துவக்கி வைப்பு!
இந்தியாவில் வந்தே பாரத் ரயில் திட்டம் – நாக்பூரில் பிரதமர் நாளை துவக்கி வைப்பு!

இந்தியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் நோக்கில் வந்தே பாரத் ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இந்த ரயில் சேவை பல்வேறு நகரங்களை தொடர்ந்து நாக்பூரிலும் தொடங்கப்படவுள்ளது.

வந்தே பாரத் ரயில்:

இந்தியாவில் பிரதமர் மோடி அவர்கள் வந்தே பாரத் எனும் ரயில் சேவை திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் விரைவு ரயில்கள் தயாரிக்கப்பட்டு முக்கிய நகரங்கள் இணைக்கப்பட்டு வருகிறது. முதன் முதலில் டெல்லி மற்றும் வாரணாசி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து வரும் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் சுமார் 75 நகரங்களை இணைக்கும் வகையிலான வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Google, Amazon வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ் – அச்சத்தில் இருக்கும் ஊழியர்கள்!!

Exams Daily Mobile App Download

அண்மையில் சென்னை – மைசூர் இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவை துவங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நாளை (டிச.11) நாக்பூரில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்கள் நாளை காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு அம்பேத்கர் சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறார். பிறகு அங்கிருந்து நாக்பூர் ரயில் நிலையம் சென்று வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் விதர்பா நகரில் நடைபெறும் பொது விழாவில் கலந்து கொண்டு சுமார் 1,500 கோடி மதிப்பிலான ரயில் திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார். நாளை பிரதமரின் வருகையை முன்னிட்டு விதர்பா நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!