PM கிசான் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவரா நீங்கள் – உடனே இதை கவனிங்க!
இந்தியாவில் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி புதிய திட்டமான பிஎம் கிசான் திட்டம் கடந்த 2019ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. மத்திய அரசின் பிரதமரின் இந்த திட்டத்தில் நாடு முழுவதும் சொந்த நிலம் வைத்துள்ள விவசாய குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதற்கான செயலில் இருந்து வருகிறது. மேலும் வேளாண் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கான செலவுகளை செய்து கொள்ள இந்த பணம் வழங்கப்படுகிறது.
ரூ.20,000 கோடி செலவில் 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் – முழு விவரங்களுடன்!
மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் இன்னும் சேராத அனைத்து தகுதியுள்ள விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ரூ.6,000 பணப்பலன் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாக தெரிவித்தார். அத்தகைய விவசாயிகளை அடையாளம் கண்டு அவர்களை இந்தத் திட்டத்தில் சேர்ப்பதில் அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
























