வயது மூத்த குடிமக்களுக்கு அரசு அளித்துள்ள ஜாக்பாட் அறிவிப்பு – இலவச புனித பயண வாய்ப்பு!
மத்திய மற்றும் மாநில அரசுகள் வயது மூத்த குடிமக்களுக்கு என்று பலதரப்பட்ட சலுகைகள் மற்றும் வசதிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மத்தியபிரதேச அரசு இலவச புனித பயணம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
புனித பயணம்:
புனித பயணங்களுக்கு அனைத்து தரப்பட்ட மக்களும் சென்று அவர்களின் மத ரீதியான ஆசைகளை நிவர்த்தி செய்து கொள்ள ஏதுவாக அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வகையில், மத்திய பிரதேச அரசு இலவசமாக 20,000 பேரை ராமேஸ்வரம், துவாரகா, காமாக்யா, ஷீரடி, ஜகந்நாத், பூரி, அயோத்தி மற்றும் காசி போன்ற புனித தலங்களுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஜனவரி 21ம் தேதியாகிய நாளை முதல் மார்ச் 29ம் தேதி வரை மத்திய பிரதேசத்தில் இருந்து 20 ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் உட்புற வடிவமைப்பு – புகைப்படங்கள் வெளியீடு!!
Follow our Instagram for more Latest Updates
இந்த பயணத்தில் கலந்து கொள்ளும் முதியவர்களுக்கு உணவு, தங்கும் இடம், பிரயாண செலவு, உள்ளிட்ட அனைத்தும் அரசே ஏற்றுக் கொள்ளும். மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட வரி எதுவும் செலுத்தாதவர்கள், 62 வயது வரையிலான பெண்கள், 60% மேல் உடல் ஊன முற்றவர்கள், சேர்ந்து பயணிக்க விரும்பும் தம்பதியரில் இருவரில் ஒருவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயதை விட குறைவான வயது இருந்தால் அவர்கள் இந்த புனித பயணத்திற்கு தகுதியானவர்கள் என்று அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, 60% ஊன முற்றவர்கள் எந்த வித செலவும் இல்லாமல் தன்னுடன் 1 நபரை அழைத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.