6,000 ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம் – பிரபல நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
முன்னணி டெக் நிறுவனமான பிலிப்ஸ் லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் சுமார் 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால் நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஊழியர்கள் பணி நீக்கம்:
சமீப கால காலமாக பொருளாதார நிலையை காரணம் காட்டி முன்னணி டெக் நிறுவனங்கள் ஆட்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் ஏராளமானோர் வேலையிலிருந்து உள்ளனர். மற்ற நிறுவனங்களை தொடர்ந்து தற்போது முன்னணி சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான பிலிப்ஸ் லாபத்தை அதிகரிக்கும் நோக்கிலும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் சுமார் 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்தியன் ஏர் போர்ஸ் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
அதாவது 6000 ஊழியர்கள் என்பது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 5% ஆகும். கடந்த ஆண்டில் சுமார் 4000 ஊழியர்களை பிலிப்ஸ் பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த பணி நீக்கம் 2022 அக்டோபரில் தான் நடைபெற்றது. அடுத்த 3 மாதங்களில் மீண்டும் வேலை நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால் நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஆட்கள் குறைப்பு நடவடிக்கை குறித்து பேசிய நிறுவனத்தின் தலைமை நிர்வாகி 2025 ஆம் ஆண்டுக்குள் பணியாளர்களை குறைப்பது அவசியமான ஒன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். தற்போது பிலிப்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 70% வீழ்ச்சியடைந்து உள்ளது. இதனையடுத்து நிறுவனம் ஆட்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.