பதற வைத்த நிலநடுக்கம் – அளவு கோலில் 6.8 ஆக பதிவு.. அச்சத்தில் மக்கள்!
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
நிலநடுக்கம்:
உலக அளவில் பல நாடுகளில் அண்மை காலமாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை உருவாகியுள்ளது. மற்ற நாடுகளைத் தொடர்ந்து இன்று பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் திடீரென கட்டிடங்கள் குலுங்க தொடங்கியது இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளில் இருந்து வெளியேறி உள்ளனர்.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை – ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!
ஏற்கனவே கடந்த 2ம் தேதி இது போன்று நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது ரிக்டர் அளவில் 7.5 ஆகவும் பதிவானது. இந்த தொடர் நிலநடுக்கத்தை அடுத்து தற்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு மக்களிடையே தற்போது பதற்றம் அதிகரித்துள்ளது.