மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்..!!
மதுரை மாட்டுத்தாவணி அருகில் 9.56 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தில் டைடல் பார்க் அமைக்க அரசு முடிவு செய்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த நிலம் வண்டியூர் குளம் என்றே வருவாய் ஆவணங்களில் உள்ளதால் இந்த இடத்தில் டைடல் பார்க் கட்டிடத்தைக் கட்ட அனுமதிக்க கூடாது என நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் மயில்சாமி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இனி அனைத்து நீதிபதிகளுக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில், “வண்டியூர் குளம் இருந்த இடத்திலேயே தற்போது மாட்டுத்தாவணி பேருந்து நிலையமும் அமைந்துள்ளது. இந்தத் பகுதி 45 ஆண்டுகளுக்கு முன்பாக மறு வரையறை செய்யப்பட்டது எனக் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது”. அந்த உத்தரவை எதிர்த்து மயில்சாமி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு இன்று (19-05-2025) உச்ச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டபோது மதுரை உயர் நீதிமன்ற கிளை முன்வைத்த அதே அடிப்படையில் மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
























