இனி அனைத்து நீதிபதிகளுக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் வேறுபாடு உள்ளதாக கூறி உயர்நீதிமன்றதில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வின் மூலம் விசாரிக்கப்பட்டது. அப்போது, மாவட்ட நீதிபதியாக இருந்தோ அல்லது வழக்கறிஞர்களாக இருந்தோ உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்தப்பட்டாலும், ஓய்வுபெற்ற அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் “ஒரு பதவி ஒரு ஓய்வூதியம்” என்ற கொள்கை பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ஆசிய கோப்பை தொடர்களில் இருந்து விலகிய இந்தியா.. BCCI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
இதனால் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் நீதிபதிகளுக்கு பாகுபாடின்றி ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும், “உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஓய்வூதியம் தர வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகள் ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.13.6 லட்சம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும், * உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருக்கும்போது இறந்தால், அவர் நிரந்தரமாகப் பணியாற்றினாலும் அல்லது கூடுதல் பொறுப்பில் இருந்தாலும், அவரது மனைவி அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மத்திய அரசு, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.



























