வருமானம் சரியா இல்ல.. ஆனா personal loan வேணும்..?? ” அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..!!
சரியான வருமானம் இல்லாத மக்கள் மத்தியில் தனிநபர் கடன் பெறுவது என்பது பெரும் சிக்கலாக இருக்கிறது. இந்த சிக்கலை நீக்கும் வகையில், எளிய முறையில் PERSONAL LOAN பெறும் வழிமுறைகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
அதாவது, தனிப்பட்ட அவசர செலவுகளுக்கு தனிநபர் கடன் மிகவும் கைகொடுக்கும் ஒன்றாக உள்ளது. சம்பளம் பெறுபவர்களாக இருந்தால், அவர்களின் வருமானமானது CREDIT SCORE மற்றும் PAN CARD மூலம் கடன் வழங்குவோருக்கு தெரியக்கூடும். ஆனால், சுயதொழில் அல்லது அமைப்பு சாரா நிறுவனங்களின் ஊழியராக இருக்கும் பட்சத்தில், உங்கள் வருமானத்தை உறுதி செய்யும் விதமாக மாற்று சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும். மேலும், வருமானம் சரியாக இல்லாதவர்கள், வருமான சான்றிதழ் இல்லாமல் PERSONAL LOAN-யை ஆன்லைனில் விண்ணப்பிப்பது மூலம் எளிதில் பெற முடியும்.
ஆன்லைன் PERSONAL LOAN APP :
பெரும்பாலும் ஆன்லைனில் தனிநபர் கடனை விண்ணப்பிக்கும் போது, உங்களின் கிரெடிட் ஸ்கோரை வைத்து எவ்வளவு கடன் வழங்க வேண்டும் என்று நிர்ணயிப்பார்கள். மேலும், கூடுதல் விவரங்களுக்கு உங்கள் வங்கி சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க சொல்வார்கள்.
மாதம் ரூ.1500 முதலீடு… ஆனால், கிடைப்பதோ ரூ.5 லட்சம்..!! அட, இந்த திட்டம் சூப்பரா இருக்கே”..!!
மாற்று வருமான சான்றிதழ்:
சரியான வருமானம் இல்லாதவர்கள், தனிநபர் கடன் பெற வேண்டும் என்றால், வழக்கமான டெபாசிட் மற்றும் நிதிநிலை குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இது மாற்று சான்றிதழாக கணக்கிடப்படும்.
பிணையக் கடன்:
தனிநபர் கடன் பெற FIXED DEPOSIT, தங்கம் போன்றவை பிணையம் வைத்து கடனை பெறுவது இன்னொரு option ஆக வைத்துக் கொள்ளலாம்.
பியர்-டு-பியர் கடன் வழங்கும் தளங்கள்:
இந்த திட்டத்தின் மூலம் சிறிய அளவிலான தனிநபர் கடன்களை நம்மால் பெற முடிகிறது. அதனால், இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


























