தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் – மே 22ல் உண்ணாவிரத போராட்டம்!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் கோரி மே 22 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
உண்ணாவிரத போராட்டம்
தமிழக அரசுப் பள்ளிகளில் 2012 ஆம் ஆண்டு முதல் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தேர்தல் வாக்குறுதியில் 181வது வாக்குறுதியாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனால் பகுதி நேர ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இது குறித்து போராட்டம் நடத்தியது.
தமிழக 10 & 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு!
அதில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், மே மாத சம்பளம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. ஆனால் அது குறித்து அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனால் பல ஆண்டுகளாக போராடி வரும் தங்களுக்கு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி மே 22 ஆம் தேதி சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பகுதி நேர ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.