தமிழகத்தில் ஜூலை 12க்கு பிறகு ஊரடங்கு தளர்வுகள் – பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில், ஜூலை 12ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கில் என்னென்னெ தளர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் தங்களது எதிர்பார்ப்புகளை தெரிவித்து உள்ளனர்.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகம் முழுவதும் மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதில் பாதிப்பு எண்ணிக்கை குறைவதன் அடிப்படையில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் தினசரி 35 ஆயிரம் வரை பதிவு செய்யப்பட்ட பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 3 ஆயிரமாக குறைந்து உள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களுக்கும் கடந்த ஜூலை 5ம் தேதியில் இருந்து ஒரே மாதிரியான தளர்வுகள் அமலாகி உள்ளன.
வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்களுக்கு கூடுதல் அம்சம் – விரிவான விளக்கம்!
அதன்படி பேருந்து பொதுப்போக்குவரத்து தொடங்கி உள்ளது. ஹோட்டல்களில் அமர்ந்து உண்ண அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மத வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில், பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அனைத்து தளர்வுகளையும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இ-பாஸ், இ-பதிவு முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த தளர்வுகள் அனைத்தும் ஜூலை 12ம் தேதி வரை அமலில் இருக்கும்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் ஜூலை 12ம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் தங்களது எதிர்பார்ப்புகளை தெரிவித்து உள்ளனர். அதன்படி, தியேட்டர்கள் குறிப்பிட்ட அளவு பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி, பேருந்துகளில் 100% பயணிகள் அனுமதி, பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான தேதி உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்படலாம் என கூறி உள்ளனர். இருப்பினும் முதல்வர், மருத்துவ நிபுணர் குழு மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகே இது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும்.