மத்திய அரசு ஊழியர்கள் இறக்கும் பட்சத்தில் அவர்களுக்கான ஓய்வூதியம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம்:
மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களுக்குப் பிறகு வாழ்க்கை துணைக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதாவது, மத்திய அரசின் ஓய்வூதிய விதிப்படி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் காலத்திற்குப் பிறகு அவர்களது கணவர் அல்லது மனைவிக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும்.
யூனியன் வங்கியில் 606 காலியிடங்கள் – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || ரூ.89,890/- மாத ஊதியம்!
ஆனால், தற்போது ஓய்வூதிய திட்டத்தில் சற்று மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மத்திய அரசு பெண் பணியாளர்கள் அல்லது ஓய்வூதியதாரர்கள் தங்களது கணவருக்கு பதிலாக பிள்ளைகளை குடும்ப ஓய்வூதியத்திற்கான வாரிசுகளாக நியமனம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவாகரத்து பெறும் பெண்களுக்கு ஏற்படுகின்ற விளைவுகளை தவிர்க்கும் வகையில் இந்த ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.