தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் – அரசின் புதிய உத்தரவு என்ன?
தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் சரியாக வழங்கப்படாத நிலையில் நிலுவைத் தொகையுடன் ரூ.1000 ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓய்வூதியம்:
தமிழகத்தில் உள்ள கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூபாய் 1000 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சில மாதங்களாக கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் சரியாக வழங்கப்படாமல் நிறுத்தி வைத்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களின் குடும்பங்கள் கடந்த சில மாதங்களாகவே கடுமையான நெருக்கடியில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.15க்கு விற்பனை – மத்திய அமைச்சர் உறுதி!
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு இந்த குற்றச்சாட்டு கொண்டு செல்லப்பட்ட நிலையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு உடனடியாக நிலுவைத் தொகையுடன் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இனிவரும் மாதங்களில் ஐந்தாம் தேதிக்குள் கட்டுமான தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.