தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்க போகுது – இன்றைய வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்க போகுது - இன்றைய வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்க போகுது - இன்றைய வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்க போகுது – இன்றைய வானிலை அறிக்கை!

தமிழகத்தில் காற்றின் மேற்கு திசை மாறுபாடு காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி தென்காசி, திண்டுக்கல், நாகை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து ஜூலை 6, 7, 8, 9 ஆகிய நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் – அரசின் புதிய உத்தரவு என்ன?

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.மேலும் ஜூலை 9 வரை தெற்கு இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்க கடல், அரபிக் கடலின் பகுதிகள் ஆகியவற்றில் சூறாவளி காற்று மணிக்கு 65 கி. மீ வேகத்தில் வீசப்படும். அதனால் மீனவர்கள் மேற்கண்ட கடல்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!