சாம்பியன்ஸ் டிராபி 2025.. இந்தியாவின் வருகையை விரும்பும் பாகிஸ்தான்.. பிசிசிஐயின் முடிவு என்ன??
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் கைப்பற்றி உள்ளது. அதன்படி இத்தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இத்தொடர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
The OG GOAT.. கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு விருது.. விவரம் உள்ளே!!
அதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானில் தங்க விரும்பவில்லை எனில், ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் இந்திய அணி டெல்லி அல்லது சண்டிகருக்குத் திரும்ப ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் பிசிசிஐ – க்கு PCB கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



























