மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதை – சென்னை மாநகராட்சியின் சூப்பர் அறிவிப்பு!!
உலகப் புகழ் பெற்ற சென்னை மெரினா கடற்கரையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடலில் கால் நனைத்து, உள்ளம் மகிழ்ந்து விளையாடுவார்கள். ஆனால் மாற்றுத்திறனாளிகளால் இவ்வாறு விளையாட இயலாது. இதையடுத்து தற்போது மாநகராட்சி இவர்களுக்கு என சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள்
உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான மெரினா கடற்கரையில் தினந்தோறும் பொதுமக்கள் வந்து அங்குள்ள கடற்கரை மண்ணில் நடந்து சென்று கடலில் தங்களின் கால்களை நனைத்து விளையாடுவார்கள். ஆனால் இந்த எழில் கொஞ்சும் மெரினா கடற்கரைக்கு மாற்றுத்திறனாளிகளால் செல்ல இயலாது. ஏனெனில் அவர்களால் கடல் மண்ணில் வெகு தூரம் நடந்து செல்வது கடினமான செயலாகும்.
Follow our Instagram for more Latest Updates
ஆனால் இவர்களுக்கு பண்டிகை காலங்களில் தற்காலிக நடைபாதை சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டு வருகிறது. அதாவது கடற்கரை சாலையிலிருந்து கடல் வரைக்கும் ஒரு தற்காலிக பாதை அமைக்கப்படும். இதன் வழியாக இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள் மற்றும் வீல் சேர்கள் ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகள் கடலுக்கு அருகில் செல்லலாம். ஆனால் இந்த பாதையானது தற்காலிகமாக மட்டுமே அமைக்கப்பட்டு வருகிறது. இதனை நிரந்தரமாக அமைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
நவ.29 ம் தேதி தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் – உஷார் மக்களே!
Exams Daily Mobile App Download
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை மாநகராட்சி இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை நாளை திறந்து வைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. அத்துடன் விரைவில் இதே போன்று பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதைகள் அமைக்கப்படுவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.