பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் – ஜனவரி 29 முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!!
பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜனவரி 29 ஆம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் உரையாற்றவுள்ளார் என நாடாளுமன்ற விவகாரத்துறை அறிவித்துள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர்:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மாதம் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டம் ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கு உத்தரவால் நாட்டின் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதனை சரி செய்யும் விதத்தில் பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஆன்லைன் வகுப்புகளுக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு பகுதிகளாக நடத்தப்படும். அமர்வின் முதல் கட்டம் ஜனவரி 29 ஆம் தேதி ஜனாதிபதியின் உரையுடன் தொடங்கி, பிப்ரவரி 15 ஆம் தேதி முடிவடையும். இரண்டாம் கட்டம் மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறும் என வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 13 முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!!
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மக்களவையில் பதினேழு உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தின் மேல் சபையைச் சேர்ந்த 8 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கூட்டத்தொடர் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்