ஜனவரி 13 முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் வரும் ஜனவரி 13ம் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. ஏற்கனவே இரு உள்நாட்டு தயாரிப்பு தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் ஏற்கனவே பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு உள்நாட்டு தயாரிப்பு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து முக்கிய அறிவிப்புகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.
ஜனவரி 6 (நாளை) முதல் கல்லூரிகள் திறப்பு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதில் பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. அதன்படி நாடு முழுவதும் வரும் ஜனவரி 13ம் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசிகளுக்கு அவசர கால ஒப்புதல் வழங்கப்பட்ட 10 நாட்களுக்கு உள்ளாக அதற்கான பணிகள் தொடங்கப்படும்.
ஆன்லைன் வகுப்புகளுக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்னால் உள்ளிட்ட இடங்களில் மிகப்பெரிய தடுப்பூசி சேமிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் மத்திய சுகாதாரத்துறை செயலர் தெரிவித்து உள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்