ஜனவரி 6 (நாளை) முதல் கல்லூரிகள் திறப்பு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!

0
ஜனவரி 6 (நாளை) முதல் கல்லூரிகள் திறப்பு - புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
ஜனவரி 6 (நாளை) முதல் கல்லூரிகள் திறப்பு - புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
ஜனவரி 6 (நாளை) முதல் கல்லுரிகள் திறப்பு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (ஜனவரி 6) முதல் அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்திய அரசு வெளியிட்ட கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

கல்லூரிகள் திறப்பு:

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் டிசம்பர் 17 முதல் தொடங்கப்பட்டன. இந்நிலையில் வருகிற ஜனவரி 6-ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கவுள்ளதாக புதுச்சேரி அரசு உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு வழக்கு – இடைக்கால தடை விதிக்க மறுப்பு!!

இந்நிலையில் புதுச்சேரி உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் யாசம் லட்சுமி நாராயணசாமி ரெட்டி அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “புதுச்சேரியில் செயல்படும் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வருகிற ஜனவரி 6-ஆம் தேதி முதல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்திய அரசு வெளியிட்ட கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும். கல்லூரி சுற்றுப்புறத்தை கொரோனா பரவாத வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

நடப்பு கல்வியாண்டு முதல் பள்ளிகள் திறப்பு – 69% பெற்றோர்கள் ஆதரவு! கருத்துக்கணிப்பில் தகவல்!!

மேலும் கல்வி நிறுவனங்கள் தங்கள் சொந்த செலவில் உடல்வெப்பநிலை கண்டறியும் கருவி, சானிடைசர் போன்ற பாதுகாப்பு சாதனங்களை வாங்க வேண்டும். ஒரு வகுப்பில் 60-க்கு மேற்பட்ட மாணவர்கள் இருந்தால் இரு பிரிவுகளாக பிரித்து வகுப்புகள் நடத்தலாம். காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை வாரம் 6 நாட்கள் கல்லூரிகள் நடத்த வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல்நிலை குறித்து அடிக்கடி கண்காணிக்க உதவி மையம் அமைக்க வேண்டும். வகுப்பறைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்கள் ஒருவருக்கொருவர் 2 மீட்டர் இடைவெளி விட்டு அமர வேண்டும்” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!