நடப்பு கல்வியாண்டு முதல் பள்ளிகள் திறப்பு – 69% பெற்றோர்கள் ஆதரவு! கருத்துக்கணிப்பில் தகவல்!!
இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் இருந்து புதிய கல்வி கொள்கை ஆரம்பிக்க உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு நடைபெற்றது. அதில் 69% பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கலாம் எனத் தெரிவித்துள்ளதாக கணக்கெடுப்பின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. ஒரு சில மாநிலங்களில் அக்டோபர் 15 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பீகார், அசாம், கேரளா, உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகியவை மாநிலங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதத்திலிருந்து பள்ளிகளை மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
இந்நிலையில் புதிய கல்வியாண்டு வருகிற ஏப்ரல் மாதம் முதல் தொடங்கப்படவுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து நாடு முழுவதும் 19,000-க்கு மேற்பட்ட பெற்றோர்களிடம் கருத்துகேட்பு நடத்தப்பட்டது. அதில் 69% பெற்றோர்கள் கண்டிப்பாக நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்க வேண்டும் என கூறியுள்ளனர். அவ்வாறு திறக்காவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.
ஜனவரி 18 முதல் கோவையில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
ஒரு வேலை கொரோனா தடுப்பூசி ஏப்ரல் மாதம் அல்லது புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன் கண்டுபிடித்தால் 26% இந்திய பெற்றோர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப உள்ளனர். மீதமுள்ள பெற்றோர்கள் தடுப்பூசி கண்டறிந்து 3 மாதங்கள் காத்திருந்து அதன் விளைவுகளை கண்டு பின் பரிசீலிப்பதாக தெரிவித்தனர். தற்போது எடுத்த கணக்கெடுப்பின் படி 26% பெற்றோர்கள் மட்டுமே ஏப்ரல் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என ஒப்புக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்