நாடு முழுவதும் 12ம் வகுப்பு மதிப்பீடு மாற்று முறை – பிரதமருக்கு கோரிக்கை!!
தற்போதுள்ள சூழ்நிலையில் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை நடத்துவது முடியாத காரியமாக உள்ளதால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான மாற்று மதிப்பீடு முறையை கையாள வேண்டும் என்று இந்திய பெற்றோர் சங்கம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது.
பிராமருக்கு கோரிக்கை:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் பரவி வருகிறது. இதற்காக தீவிர நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நோய் பரவலின் தீவிரம் காரணமாக பல கல்வி வாரியங்களிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4,690 புதிய மருத்துவர்கள் நியமனம் – கொரோனா தடுப்பு பணி!!
சிபிஎஸ்இ கல்வி வாரியமும் இதே முடிவை அறிவித்துள்ள நிலையில், வரும் ஜூன் 1ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தி அதில், கொரோனா சூழல் குறித்து ஆலோசித்து, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னதாக தேதிகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. தற்போது கொரோனா பரவல் மேலும் அதிகரித்துள்ளதால் 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக இந்திய பெற்றோர்கள் சங்கத்தில் இருந்து பிரதமருக்கு கோரிக்கை வைத்து கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகமாக பரவி வரும் இந்த நிலையில் நேரடி தேர்வுகளை நடத்துவது பாதுகாப்பானதாக இருக்காது. தேர்வுகளை மேலும் தாமதிப்பது மாணவர்களின் கவலை, மன அழுத்தத்தை அதிகரிப்பதுடன் ஏராளமான நேரத்தையும் வீணாக்கும்.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே 12ம் வகுப்பு பாடத்தை அவர்கள் 1ஆண்டுக்கும் மேலாக படித்து வருகின்றனர். இதனால் 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பீட்டில் மாற்று முறையை நாடு முழுவதும் ஒரே மாதிரியாகக் கையாள வேண்டும். பல வெளிநாடு பல்கலைக்கழகங்களிலும் அகமதிப்பீடு முறை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்தியாவிலும் அதையே பின்பற்றலாம். தேவைப்பட்டால் கல்லூரிகளில் திறனாய்வு தேர்வுகளை நடத்தலாம் நேற்றும் அதில் கூறியுள்ளனர்.