தமிழகத்தில் 4,690 புதிய மருத்துவர்கள் நியமனம் – கொரோனா தடுப்பு பணி!!
தமிழகத்தில் மருத்துவ படிப்பு இறுதியாண்டு முடித்த 4,690 மாணவர்கள் இன்று முதல் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மருத்துவ மாணவர்கள் :
தமிழகத்தில் கடந்த வருடம் முதலே கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதன் பாதிப்பு பெரும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவர்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
இதை தடுக்க மத்திய அரசு எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களை கொரோனா சிகிக்சை பணிக்கு ஈடுபடுத்தி கொள்ள முடிவு செய்தது. இதன் படி தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் இறுதியில் தேர்வுகள் நடத்தப்பட்டது. மேலும் பல்கலை இணைய தொழில்நுட்பம் வாயிலாக, அனைவரையும் ஒருங்கிணைத்து கணினி வாயிலாக விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளும் நடைபெற்றது. இரவு, பகல் பாராமல் தொடர்ந்து அப்பணி நடைபெற்றதன் பயனாக, இரு வாரங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
TN Job “FB Group” Join Now
இந்த கடுமையான சூழலை உணர்ந்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட்டது. இதனால் தமிழகத்தில் புதிதாக 4,690 க்கும் அதிகமான மருத்துவ படிப்பு இறுதியாண்டு மாணவர்கள் இன்று முதல் கொரோன சிகிக்சை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவலின் அதிகரிப்பதால் மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ளது. அதனால் தமிழக அரசு மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் புதிய மருத்துவர்களை கொரோனா சிகிசைக்கு பணியமர்த்தியுள்ளது.