தமிழக அரசு பேருந்துகளில் நாளை முதல் பார்சல் சேவை தொடக்கம் – போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு!
தமிழக அரசு பேருந்துகளில் நாளை முதல் பார்சல் சேவை தொடக்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதில் முதற்கட்டமாக 7 நகரங்களில் இருந்து இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பார்சல் சேவை:
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் நாளை முதல் பார்சல் சேவை துவங்க இருக்கிறது. அதாவது, பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வணிகர்கள் தினசரி வாடகை அல்லது மாத வாடகை மூலமாக பேருந்து மூலமாகவே மற்ற ஊர்களுக்கு பொருட்களை அனுப்ப முடியும். இதில் முதற்கட்டமாக 7 முக்கிய நகரங்களில் இருந்து பார்சல் சேவை சென்னைக்கு அனுப்ப இருக்கின்றனர். அதாவது, மாத வாடகையின் மூலமாகவோ அல்லது தினசரி வாடகையின் மூலமாகவோ பார்சல்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கோயம்புத்தூர், ஓசூர் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு பார்சல் சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பஸ் மற்றும் லாரியை காட்டிலும் அரசு பேருந்துகளில் பார்சல் கட்டணம் மிகவும் குறைவு என்பதால் இந்த பார்சல் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் பார்சல் சென்னைக்கு சென்றடையும் வகையில் இந்த சேவை வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 2) பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி
இதனையடுத்து, நெல்லை, தூத்துக்குடி போன்ற நகரங்களில் இருந்து சென்னைக்கு 80 கிலோ வரைக்கும் எடை கொண்ட பொருட்களை பார்சல் அனுப்ப ரூ.390 வரைக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாத வாடகை அடிப்படையில் பார்சல் அனுப்பும் வியாபாரிகளுக்கு ஒரு மாதத்திற்கான பாஸ் வழங்கப்படும். அந்த பாஸ்ஸில் எந்தெந்த தேதியில் பார்சல் அனுப்புகிறீர்களோ அதனை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு தகுந்தாற்போல கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்