தனம் ஐஸ்வர்யா முல்லையை கிண்டல் செய்யும் மீனா, மெத்தை வாங்கி கொடுத்த கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா ஐஸ்வர்யா, தனம், முல்லையை கிண்டல் செய்து பேசுகிறார். பின் கதிர் அவர்களுக்கு புதிதாக மெத்தை வாங்கி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா ஐஸ்வர்யா முல்லை கர்ப்பமாக இருப்பதை சொல்லி கிண்டல் செய்கிறார். தனம் அக்கா அன்னைக்கு மாமா உடன் வந்தார்களே அன்னைக்கே கர்ப்பமாக இருந்திருக்கிறார். உனக்கு தாளிக்கும் வாடை பிடிக்கவில்லை என்றால், அவங்களுக்கும் பிடிக்காமல் இருக்கிறது என சொல்லி சிரிக்கிறார். பின் மீனா இந்த ஹால் மிகவும் ராசியான ஹால் என சொல்லி சிரிக்கிறார். ஐஸ்வர்யா அடுத்து நீங்க தான் என சொல்ல, மீனா நான் எல்லாம் வாய்ப்பே இல்லை என மீனா சொல்கிறார்.
ஜெனி நிலாவை கொஞ்சியதால் கோவப்பட்ட செழியன், பாக்கியாவிற்கு கிடைத்த கேட்டரிங் ஆர்டர் – இன்றைய எபிசோட்!
பின் தனத்தை தேடி அவர்கள் செல்கின்றனர். எங்கு தேடியும் தனத்தை காணவில்லை. உடனே பின் பக்கம் எல்லார் கண்ணிலும் படாமல் தனம் இருக்கிறார். அப்போது தனத்தை மீனா கிண்டல் செய்து பேசுகிறார். எப்படி இதெல்லாம் நடந்தது என நான் கேட்க மாட்டேன் என சொல்ல, உடனே தனம் எனக்கு ஐஸ்வர்யாவை நினைத்து தான் பயமாக இருப்பதாக சொல்கிறார். நீயும் நானும் பெரிய வயிற்றுடன் இருக்க வேண்டும் என சொல்ல மீனா கிண்டல் செய்கிறார். மறுபக்கம் ஜீவா கதிர் அண்ணாச்சியிடம் விவரத்தை சொல்ல, இதை சொல்லாமல் தான் அண்ணன் தவித்ததாக சொல்கிறார். பின் மூர்த்தி வர இவர்களிடம் பேச முடியாமல் ஓட பார்க்கிறார். ஆனால் ஜீவா கதிர் அவரை தடுத்து நிறுத்துகிறார்கள்.
பின் அண்ணாச்சியும் கிண்டல் செய்ய, உடனே மூர்த்தி சும்மா இருங்க எல்லாரும் என சொல்கிறார். பின் கதிர் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு புதிதாக மெத்தை வாங்கி கொடுக்கிறார். பின் கதிர் வீட்டில் யாரும் வேலை செய்ய வேண்டாம் என சொல்ல, மீனா எல்லா வேலையும் நானே பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். பின் மீனா உடன் சேர்ந்து கொண்டு கதிரும் கிண்டல் செய்ய, தனம் சும்மா இரு என சொல்கிறார். பின் மீனா எல்லா வேலைகளையும் செய்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.