கயலை கவனிக்காமல் இருக்கும் தனம், கோவத்தில் சண்டையிடும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கயலை கவனிக்காமல் இருக்கும் தனம், கோவத்தில் சண்டையிடும் மீனா - இன்றைய
கயலை கவனிக்காமல் இருக்கும் தனம், கோவத்தில் சண்டையிடும் மீனா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கயலை கவனிக்காமல் இருக்கும் தனம், கோவத்தில் சண்டையிடும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா குழந்தைக்கு மருந்து வாங்க செல்ல கயலை தனியாக விட்டு தனம் உள்ளே செல்கிறார். கயலை வேற மாதிரி பார்க்கிறீங்க என மீனா தனத்திடம் கோபப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா கடைக்கு சென்றுவிட்டு வர வண்டி பழுதாகிவிடுகிறது. அப்போது மீனாவின் அப்பா வந்து அவரை அழைத்து கொண்டு வீட்டிற்கு வருகின்றனர். அப்போது தனம் அம்மாவை பார்த்துக் கொண்டு குழந்தைக்கு பால் கொடுக்க செல்கிறார். அந்த நேரம் பார்த்து தனத்தின் அம்மா எழுந்து செல்ல, கயல் தனியாக அழுது கொண்டிருக்கிறார். அப்போது மீனா வந்து கயலை தூக்க, தனம் வருகிறார். கயலை பார்த்துக் கொள்ள முடியாமல் இருந்தால் சொல்லலாம் என தனத்திடம் சத்தம் போடுகிறார்.

அப்போது தனத்தின் அம்மா இவ்வளவு நேரம் அவ புள்ளையை கூட பார்த்துக் கொள்ளாமல் கயலை தான் பார்த்துக் கொண்டாள் என சொல்ல, கயலை வேற மாதிரி நடத்துறீங்க என மீனா சொல்கிறார். அப்போது தனத்தின் அம்மா இவ தான் பைத்தியம் போல பேசுகிறாள் என்றால் இவளும் அப்படி தான் பேசுகிறாள் என சொல்ல, மீனாவின் அப்பா தனத்தின் அம்மாவை சத்தம் போடுகிறார். மீனா அப்பா நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் என்ன என் முன்னால் எப்படி பேசுறீங்க, வயதில் மூத்தவர் என நினைக்கிறன் என மிரட்டுகிறார்.

கண்ணம்மாவை விவாகரத்து செய்ய சொல்லும் பாக்கியா, அப்பா பாசத்திற்கு ஏங்கும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

பின் மீனா ரூமிற்குள் வர மீனாவின் அப்பா இப்படி இந்த வீட்டில் வேலைக்காரி போல இருந்து கஷ்டப்படுகிறாய் நான் இவ்வளவு சொல்லியும் ஏன் கேட்காமல் இருக்கிறாய் என மீனாவின் அப்பா சொல்ல மீனா அழுகிறார். முல்லை வந்ததும் தனத்தின் அம்மா அனைத்தையும் சொல்லி அழுகிறார். பின் மீனா வர முல்லை மீனாவிடம் கேள்வி கேட்கிறார். அக்கா ஒன்றும் சொல்லவில்லை அம்மா தான் சொல்லி வருத்தப்பட்டார்கள் என சொல்ல, மீனா நான் இந்த வீட்டில் சண்டை போட்டால் மட்டும் குறை சொல்லுங்க என சொல்கிறார்.

தமிழகத்தில் தீபாவளிக்கு 2 மணிநேரம் பசுமை பட்டாசுகளை வெடிக்க மட்டுமே அனுமதி – அறிவிப்பு!

பின் தனம் நீ என்ன வேண்டும் என்றாலும் பேசு ஆனால் குழந்தைகளை பற்றி மட்டும் பேசாதே என சொல்கிறார். எனக்கு குழந்தை பிறந்ததால் கயலை வேற என நினைப்பேனா என கேட்கிறார். உடனே மீனா நான் செய்தது தப்பு தான் என சொல்கிறார். மறுநாள் வீட்டில் பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கின்றனர். சாப்பாடு எல்லாம் வீட்டில் சமைக்க வேண்டும் என சொல்கின்றனர். எல்லாருக்கும் சொல்லியாச்சா என கேட்க சொல்லியாச்சு என சொல்கிறார். மீனா வந்து உட்கார தனத்தின் அம்மா எழுந்து செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!